விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே முருகன் கோவிலில் இருந்த வேலை கொடுக்கப்பட்டிருந்த எலுமிச்சை பழங்கள் சுமார் 2,36,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டணந்தல் கிராமம் இரட்டை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் இறுதி நாள் விமர்சையாக நடைபெற்ற நிலையில் இந்த திருவிழாவில் ஒரு பகுதியாக உற்சவ காலத்தில் முருகன் வேளில் சொருகப்பட்டிருந்த ஒன்பது எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டன. இவை மொத்தம் இரண்டு லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது. அதிகபட்சமாக ஒரு பழம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.