தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்  தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களை நடித்த பிறகு மலையாளத்தில் வெளியான அணியாத பிறவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. கடந்த 2009 ஆம் ஆண்டு அஜித்தை காதலித்து வந்த இவர் அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய திரைப்படங்களை நடித்து முடித்த பிறகு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு குடும்பம் மற்றும் பிள்ளைகள் என வாழ்ந்து வரும் ஷாலினி சமீபத்தில் தனது காதல் கணவர் அஜித்துடன் 23 வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். ரொமான்டிக்கான புகைப்படத்தை வெளியிட்டு தனது 23 வது திருமண நாளை கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது