உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், படம் பெரும் வெற்றி கண்டது.

இதனைத்தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம்  வரும் 28ம் தேதிவெளியாக உள்ளது. முதல் உ பாகத்தின் வரவேற்பால், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொன்னியன் செல்வன்-2 படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய த்ரிஷா, “விக்ரம், கார்த்தி, ரவி ஆகிய 3 சூப்பர் ஸ்டார்களுக்கும் நன்றி. தான் யாரிடமும் இவ்வளவு நெருக்கமானது இல்லை. படப்பிடிப்பு தளத்தில் தன்னை மிக பாதுகாப்பாகவும், அக்கறையுடனும் பார்த்துக் கொண்டார்கள். வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். அனைத்திற்கும் நன்றி.” என கூறினார்.