கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நளினி தனது பெற்றோரிடம் கல்வி கட்டணம் செலுத்த பணம் கேட்டுள்ளார். அவர்கள் அடுத்த வாரம் பணம் தருவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்த நளினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நளினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.