கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளக்கச்சி பகுதியில் செல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். திருமணமாகாததால் ஜெகதீஷ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஜெகதீஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகதீஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.