குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு ஹோட்டல் சமையலறையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி, அங்கு வேலை பார்த்து வந்த இளம் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளதுடன், இதுகுறித்த சிசிடிவி (CCTV) காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கோட்டின் பவநகர் சாலையில் உள்ள ‘தாகர் தானி’ (Thakar Dhani) என்ற ஹோட்டலில், ஊழியர்கள் வழக்கம் போல் வாடிக்கையாளர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது சமையலறையில் திடீரென மிக சக்திவாய்ந்த வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, அங்கிருந்த ஒரு பொருள் அதிவேகமாகப் பாய்ந்து வந்து ஊழியர் மீது பயங்கரமாக மோதியது.
राजकोट :होटल के किचन में धमाका
किचन में हुए इस धमाके में राजस्थान के रहने वाले युवक की मौत
मृतक युवक अपने परिवार का भरण-पोषण करने के लिए राजस्थान से राजकोट नौकरी करने आया था।#RAJKOT #viralvídeo #CCTV pic.twitter.com/3SGIa0Luvu
— Dixit Soni (@DixitGujarat) June 4, 2026
இந்த கோரமான தாக்கத்தால் அந்த ஊழியர் நிலைதடுமாறி அங்கிருந்த மேஜை மீது தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில், பலியான நபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பதும், தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வேலை தேடி கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் அவர் ராஜ்கோட்டிற்கு வந்து இந்த ஹோட்டலில் சேர்ந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
வெடிவிபத்து ஏற்பட்ட சில நொடிகள் சக ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்க, பின்னர் ஓடிவந்து அவரை மீட்க முயன்றும் பலனின்றிப் போனது. இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், இந்த கோர விபத்தின் வைரல் வீடியோ பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைப்பதாக அமைந்துள்ளது.
