கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான லட்சுமிக்கு நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸில் லட்சுமியை ஏற்றி சென்றனர். இந்நிலையில் வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் சென்ற போது லட்சுமிக்கு பிரசவ வலி அதிகரித்தது.

இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வினோத்குமார் வாகனத்தை நிறுத்தினார். இதனையடுத்து மருத்துவத் தொழில்நுட்ப பணியாளர் தேவி கலா பிரசவம் பார்த்ததில் லட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய், சேய் இருவரும் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.