திமுகவை கருணை இல்லாத அரசு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கடந்த ஆண்டு தீபாவளிக்கு மது விற்பனை 431 கோடி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 600 கோடி இலக்காக திமுக அரசு நிர்ணயித்துள்ளது. மக்கள் பாடுபட்டு உழைத்த பணத்தில் புத்தாடை, வெடி மற்றும் பலகாரம் போன்ற அனைத்துமே கிடைத்தது. ஆனால் முதல்வரின் வாழ்த்து மட்டும் மக்களுக்கு கிடைக்கவில்லை, ஏன் அப்படி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.