தமிழகத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் 364 தீ விபத்துக்கள் ஏற்பட்டன. பட்டாசுகளால் மட்டும் 254 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 669 பேர் காயமடைந்தனர் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 111 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.