பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.