2024 ஆம் வருடத்தில் சுனாமி பேரலைகள் ஏற்படும் என்றும், ஆசியாவில் போர்வெடிக்கும் என்றும் தீர்க்கதரிசி  நாஸ்ட்ரடாமஸ்  கணித்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ் பெற்ற பிரஞ்சு தத்துவம் மற்றும் தீர்க்கதரிசி என அழைக்கப்படுபவர் நாஸ்ட்ரடாமஸ். இவர் ஜனாதிபதி ஜான் எப் கென்னடியின் படுகொலை போன்ற வரலாற்று நிகழ்வுகளை துல்லியமாக கணித்தார். மேலும் இவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக தீர்க்கதரிசனங்களையும் கூறியிருக்கிறார்.

எப்போதும் அவருடைய கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பும்  அதிகரித்து வருகிறது. அதன்படி கொடூரமான சுனாமி மற்றும் பெரும் வெள்ளம் உலகின் சில பகுதிகளை அழிக்கும் என்றும் பேரழிவு தரும் பெரும் பஞ்சம் ஏற்படும் எனவும் கணிப்பில் தெரிவித்துள்ளார். பூமி மேலும் வறண்டு போகும் என்றும் பெரும் வெள்ளம் ஏற்படும் என்றும் சுனாமி விவசாய நிலங்களை பாதித்து கடுமையான பஞ்சத்திற்கு வழிவகுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.