45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போர் இடைநிறுத்தத்தின் இடையே மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் மேற்கொண்டு ஆறு பாலஸ்தீனியர்களை கொன்று விட்டதாகவும் இஸ்ரேலின் தாக்குதலில் மேலும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.