45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இரண்டு தரப்பினரும் முதல் கட்டமாக சிலரை விடுவித்த நிலையில் இஸ்ரேல் இரண்டாம் கட்டமாக 39 பேரை விடுதலை செய்துள்ளது. இதில் 33 சிறுவர்கள் மற்றும் 6 பெண்கள் அடங்குவர். இதனிடையே நாளை போர் நிறுத்தம் முடிவடைய இருப்பதால் மேலும் அது நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.