45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இரண்டு தரப்பினரும் முதல் கட்டமாக சிலரை விடுவித்த நிலையில் ஹமாஸ் இரண்டாம் கட்டமாக 17 பிணையக் கைதிகளை விடுதலை செய்துள்ளது. இதில் இஸ்ரேலை சேர்ந்த 13 பேரும் தாய்லாந்தை சேர்ந்த 4 பேரும் அடங்குவர். மூன்றாம் கட்டமாக விடுதலை செய்ய இருக்கும் பிணைய கைதிகளின் பட்டியலையும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.