மத்திய பிரதேஷ் மாநிலம் பன்னா மாவட்டத்தில் இருந்து சத்னா மாவட்டத்திற்கு பயணிகள் பேருந்து ஒன்று 50 பேருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து அப்பகுதியினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்தவர்கள் காயம் ஏற்பட்ட பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.