கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வள்ளலார் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பண்ருட்டியில் இருக்கும் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் வேலை பார்த்த சதாம் உசேன் என்பவர் கடன் நெருக்கடியில் இருந்ததாக தெரிகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு சண்முகம் 4 லட்ச ரூபாய் பணத்தை கடைகளில் இருந்து வசூலித்து சென்றார்.

அவரை சதாம் உசேன், வினோத்குமார், அஜித் ஆகியோர் கொலை செய்து பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சதாம் உசேன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சதாம் உசேன், வினோத்குமார், அஜித் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 7000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.