சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வசந்தகுமார் மோட்டார் சைக்கிளில் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் பாளையம் குறிஞ்சி நகர் கொங்குசாவடி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து வசந்தகுமார் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.