கரூர் மாவட்டத்தில் உள்ள பெரிய மஞ்சுவலி கிராமத்தில் வெள்ளையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜா மணி என்ற மகளும், சுப்ரமணி என்ற மகனும் இருக்கின்றனர். பக்கவாத நோயால் அவதிப்படும் சுப்பிரமணி தனது மனைவியுடன் நெல்லிகோம்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் வெள்ளையன் மாரியம்மாள் தம்பதியினர் தங்களை வயதான காலத்தில் பார்க்க யாரும் இல்லாததை நினைத்து மன உளைச்சலில் இருந்தனர்.

சற்று மனநலம் பாதிக்கப்பட்ட மாரியம்மாள் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.