இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள் குறித்த வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் குலத்தின் கரையில் பெரிய முதலை ஒன்று இருக்கிறது. ஆமை ஒன்று அதற்கு அருகில் தண்ணீருக்கு அடியில் ஒடிந்து கொண்டிருக்கிறது. அப்போது மேலே இருந்து ஒருவர் தண்ணீருக்குள் சாப்பிடுவதற்கு எதையோ வீசுகின்றார்.

மிகுந்த பசியுடன் இருக்கும் முதலை உடனடியாக முன்னாள் சென்று அந்த பொருளை பிடிக்க தொடங்குகிறது. அப்போது கரையில் இருந்து ஒரு ஆமை வெளிவந்த நிலையில் முதலையின் வாயிலிருந்து அந்த உணவை பிடுங்கிக் கொண்டு செல்கிறது. இந்த காட்சி தற்போது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் உள்ள நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.