இளைஞரை படுகொலை செய்த வழக்கில் பிரபல அரசியல் கட்சி தலைவர் ஆதிநாராயணனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தேர்தல் முன்பகை காரணமாக, திரைப்படத்தில் வரும் காட்சி போல பல்வேறு திட்டம் தீட்டி, இளைஞர் விஜீத்தை மருதுசேனை தலைவர் ஆதிநாராயணன் தரப்பு ஓடஓட வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவத்தில் திமுக கவுன்சிலர் மகன் உட்பட 9 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த ஆதிநாரயணன் கைது செய்யப்பட்டுள்ளார்