கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா நேற்று திடீரென்று தன் வேலையை இழந்த நிலையில், அவருக்கு இப்போது பல்வேறு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகள் குவிகிறது. இதனிடையே கனிமொழி எம்.பி பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்து உள்ளார். இதுதவிர ஷர்மிளாவிற்கு பல்வேறு தனியார் பேருந்துகளில் இருந்தும் வேலை அளிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மீண்டுமாக பேருந்து ஓட்டுவதற்கு வாய்ப்பளிக்க மற்றொரு தனியார் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் முன்வந்துள்ளார். இதுகுறித்து சூலூரை சேர்ந்த கிருஷ்ணா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் முருகேசன் செய்தியாளரிடம் பேசியபோது “எப்போது வேண்டுமானாலும் இடையர்பாளையத்திலிருந்து உக்கடம் நோக்கி போகும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிய வாய்ப்பு கொடுக்கிறோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வேலையில் சேர்ந்துக்கொள்ளலாம். அவிநாசி ரோடு இல்லை என்றால் என்ன?, திருச்சி ரோட்டில் ஷர்மிளா பேருந்தை ஓட்டலாம்” என்று அவர் தெரிவித்து உள்ளார்.