தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு 350 ரூபாய் அபராதம் விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பணம் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் PIB Fact Check அமைப்பு, இது தவறான தகவல் எனவும் தேர்தல் ஆணையம் அப்படி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.