இந்தியாவில் நிதியாண்டுக்கான கடைசி நாளாக மார்ச் 31ஆம் தேதி உள்ளது. அதன்படி 2023-24 ஆம் நிதியாண்டின் வருமான வரியில் இருந்து சலுகை பெற முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். வருமான வரி சட்டத்தின் படி வரும் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் வருமான வரியிலிருந்து சலுகை பெறலாம். நீங்கள் பணியாற்றுபவராக இருந்தால் மார்ச் 31ஆம் தேதிக்குள் உங்கள் அலுவலகத்தில் படிவம் 12 பி பி யை சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலமாக நீங்கள் வருமான வரி சலுகையை பெறலாம்.