பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் 10 லட்சம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என NIA அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை NIA தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ள NIA, தகவல் தருபவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.