தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் காலம் சுட்டரித்து வருகின்றது. இந்த நிலையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்கனவே இருக்கும் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த இரண்டு மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.