கடலூர் ஆலப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே வாய்க்காலில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 10 மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே கேட்ருகே பேனை நிறுத்தி ஓட்டுனர் பார்த்திபன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது வேலையில் இருந்த பள்ளி மாணவர்கள் கியரில் கை வைத்ததுடன் வேன் பின் பக்கம் சென்று வாய்க்காலில் கவிழ்ந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஓட்டுனரின் இந்த அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.