திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிகாட்டூர் கருணாநிதி தெருவில் இளமதி என்பவர் வசித்து இழந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மருத்துவமனைக்கு சொந்தமான எழும்பூர் கென்னட் லேண்ட் பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இளமதி நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் விடுதியின் பெண் பாதுகாவலர் அறைக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த விடுதி பாதுகாவலரும், உடன் இருந்தவர்களும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இளமதி தூக்கில் தொங்கியதை கண்ட அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளமதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இளமதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.