சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை முயற்சியாக இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ புதிய முன்னெடுப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு நடப்பு ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆப் போட்டிகள் தொடங்கியுள்ளன. சற்று வித்தியாசமான இந்த போட்டியில் பவுலர்கள் வீசும் ஒவ்வொரு டாட் பாலுக்கும் டிவி ஸ்கோர் கார்டில் புள்ளிக்கு பதிலாக மரக்கன்று காட்டப்பட்டு வந்தது.

இதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளனர். அதாவது இந்த ஆண்டு பிளே ஆப் போட்டியில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரக்கன்றுகளை நட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.