ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் இந்த திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்பு குழுவை மத்திய அரசு சமீபத்தில் அமைத்தது.