பிரேசிலின் மரன்ஹாவ் மாநிலத்தில் உள்ள ஜகாரே கிராமத்தில், ஹுவான் என்ற மாணவர் தனது பள்ளியை அடைய தினமும் நீண்ட தூரம் நடந்தே வந்துள்ளார்.

இதைக் கவனித்த அவரது ஆசிரியை, மற்ற மாணவர்களுடன் இணைந்து பணம் திரட்டி ஹுவானுக்காக ஒரு புதிய மிதிவண்டியையும், உணவுப் பொருட்களையும் பரிசாக வாங்கியுள்ளனர்.

மறுநாள் ஹுவான் வகுப்பிற்கு வந்தபோது, மாணவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தப் பரிசுகளை வழங்கியதைக் கண்டு அவர் இன்ப அதிர்ச்சியில் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்.

“>

 

இதைப் பார்த்த சக மாணவர்கள் ஓடிச் சென்று அவரைத் தழுவிக் கொண்ட நெகிழ்ச்சியான தருணம், மனிதநேயமும் அன்பும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.