தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் உள்ள அனைத்து வருமான வரி அலுவலகங்களிலும், ஏப்ரல் 24 முதல் மே 22 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10.30 முதல் பகல் 1.30 மணி வருமான வரி செலுத்துவோர் வரி தொடர்பான தங்களது குறைகளை மனுவாக சமர்ப்பித்து அதை தீத்துக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள ஆன்லைன் மூலம் குறை தீா்க்கும் செயல்முறையுடன் கூடுதலாக இந்த நேரடி வசதிசெய்யப்பட்டுள்ளது. எனவே வரி செலுத்துவோா் மற்றும் அவா்களது பிரதிநிதிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.