மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், ஏன் மீன் சாப்பிடுகிறீர்கள் என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பினார்.

இறைச்சியை ஏன் சாப்பிட வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு கட்சி, ஒரு நபர் எப்படி முடிவு முடிவு செய்ய முடியும்? என்று கேள்வியெழுப்பினார்.