தமிழக்தில் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று பாஜக குற்றம்சாட்ட தொடங்கியுள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி, தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள், வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்தப்படுவதால் தொடர்ச்சியாக, கூட இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் வாக்கு சதவீதம் குறைந்து வருகிறது.

வாக்கு செலுத்த வேண்டும் என்ற விதிமுறை மாறி, அது கொண்டாட்ட விடுமுறையாக மாற்றப்படுகிறது. எனவே வெள்ளிக்கிழமையும், திங்கட்கிழமையும், தயவு செய்து தேர்தல் நாளை பிக்ஸ் பண்ணாதீர்கள் என்று தெரிவித்தார்.