பல சர்ச்சைகளுக்கு பின்பு அயோத்தியில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி பிரம்மாண்ட திறப்பு விழா உடன் பல பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் , பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டது. கோவில் திறக்கப்பட்ட பின்பு ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான மக்கள் சென்று தரிசனம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

அந்த வகையில், அயோத்தி ராமர் கோவிலில் கடந்த மூன்று மாதத்தில் 1.50 கோடி பேர் தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நாள்தோறும் தரிசனம் செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.