தமிழகத்தில் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் செய்தித்தாள், ஊடகங்கள், சமூக ஊடகங்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிட தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும் வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் அரசியல் கட்சிகள் விளம்பரம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.