தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வர காரணமாக இருந்தது அதிமுக என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட மேட்டூர் அணை உபரி நீர் திட்ட பணிகளை தற்போதைய திமுக அரசு முடக்கி வைத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் அலை வீசுகிறது. என்னுடைய இந்த நிலைக்கு எடப்பாடி தொகுதி மக்களாகிய நீங்கள் தான் காரணம். நான் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். சேலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேசை  அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று இபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்