ராமநாதபுரம் பரமக்குடியில் நடிகர் கருணாஸ் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது..

2024 மக்களவைத் தேர்தலில் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ராமநாதபுரம் பரமக்குடியில் திமுக கூட்டணியில் உள்ள ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஆதரவாக கருணாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது கருணாஸ் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது என பிரச்சாரம் செய்தார். கருணாஸ் பேசிக் கொண்டிருந்தபோது குறிப்பிட்ட நபர் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

கூவத்தூரில் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக செயல்பட்டது ஏன்? என கருணாசுக்கு இளைஞர் கேள்வி எழுப்பினார். ஈபிஎஸ் ஆட்சி தொடர காரணமாக இருந்து விட்டு தற்போது கருணாஸ் எதிர்ப்பது ஏன்? என இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து கேள்வி கேட்ட இளைஞரை மேடைக்கு வருமாறு கருணாஸ் அழைத்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

இதையடுத்து பிரச்சாரத்தில் குறிப்பிட்ட இளைஞரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். கேள்வி கேட்ட இளைஞரை போலீசார் அப்புறபடுத்திய பிறகு கருணாஸ் பிரச்சாரம் செய்தார்..