அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தொடர்வதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் சீட் வழங்காததால் கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியதாக தகவல் வெளியான நிலையில் சீட் இல்லை என்பதால் வருத்தத்தில் இருந்தோம். சட்டப்பேரவை தேர்தலின் போது முக்கியத்துவம் அளிப்பதாக அதிமுக உறுதி அளித்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.