தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனைப் போலவே இபிஎஸ் அதிமுகவை பலப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  அதிமுகவில் பொதுச் செயலாளர் இ பி எஸ் கட்சிக்கு 2 கோடி தொண்டர்கள் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் இருபதாம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் இ பி எஸ் அறிவித்துள்ளார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் உடனடியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.