ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நல்லபாலியை சேர்ந்த கருப்புசாமி (50) மனைவி சாரதா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கருப்புசாமி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வந்த கருப்புசாமி மட்டன் ஏன் சமைக்கவில்லை என்று சண்டையிட்டு மனைவியை அறிவாளால் தலையில் வெட்டி உள்ளார்.

இதனை தடுப்பதற்காக வந்த அவரது மகன் பிரகாஷ் ராஜையும் அறிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு  பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பான புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பு சாமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.