கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தல குறிச்சி அம்பலத்தடிவிளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி, ராஜிவ் மற்றும் அஜய் என்ற இரண்டு மகன்களும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 19 வயதாகும் அஜய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரியில் கணினி அறிவியல் படித்து வரும் அஜய்க்கு கணித பாடம் புரியவில்லை என்றும் படிக்கவே விருப்பமில்லை என்றும் புலம்பியதாக அவருடைய சித்தி கூறியுள்ளார். இதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.