பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் இதேபோன்ற கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச ராகுல் காந்திக்கு தகுதியில்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

10 ஆண்டு காலம் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது ஏன் நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, காங்கிரஸ் எதற்கு பயந்ததோ அதற்குதான் தற்போது மோடியும் பயப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.