மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த கோட்வாலி பகுதி போலீஸார் எலி ஒன்றைக் கைது செய்தனர். சமீபத்தில் காவல்துறை சோதனையின் போது 60 சட்டவிரோத மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் அந்த மதுபாட்டில்களை சமர்பித்தனர்.

ஆனால் கைப்பற்றப்பட்ட பாட்டில்களில் உள்ள மது காணாமல் போனது. இதற்கு என்ன காரணம் என்று நீதிமன்றம் கேட்டபோது, ​​எலிகள் மதுபாட்டில்களை உடைத்து குடித்ததாகவும், ஒரு எலி பிடிபட்டதாகவும் கூறப்பட்டது. மீதமுள்ள எலிகள் தப்பிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.