தெலங்கானாவில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மாநில, தேசியக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பிரச்சாரத்தின்போது மாநில அமைச்சரும் BRS கட்சியின் முக்கியத் தலைவருமான கே.டி.ஆர்.ராவ் வாகனத்தில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தார். பிரச்சார வாகனத்தில் அளவுக்கு அதிகமானோர் ஏறியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.