கர்நாடகாவில் ஒரு பெண், நூதனமாக தனது வேண்டுதலை வெளிக்காட்டி உள்ளார். கலபுரகி அப்சல்பூர் அருகே தேவ்லகங்காபூர் கிராமத்தில், தத்தாத்ரேயா கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது அதில் இருந்த 50 ரூபாய் நோட்டை ஊழியர் ஒருவர் எடுத்துள்ளார்.

அதில் கன்னடத்தில் எதோ எழுதப்பட்டிருந்தது. அதை படித்த அவர் அப்படியே ஷாக் ஆகிவிட்டார். ஆம், அதில் தனது மாமியார் விரைவில் சாக வேண்டும் என எழுதி வேண்டுதல் வைத்துவிட்டு சென்றுள்ளார் அந்த கொலைகார மருமகள். தற்போது அந்த 50 ரூபாய் நோட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.