இ-ஸ்மார்ட் கிளினிக் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் மருத்து சேவையை பரவலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்களுக்கு இத்திட்டம் மூலம் அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை வழங்க வசதி செய்து தரப்படும். இந்த திட்டத்தை மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான லார்ட்ஸ் மார்க் அரசுடன் இணைந்து செயல்படுத்தவுள்ளது.