அமெரிக்காவை சேர்ந்த ஜோவனி சிறியோ  என்ற 17 வயது சிறுவன் லில்லி சில்வா  எனும் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் திடீரென ஜோவனியுடன் லில்லி  பிரேக்கப் செய்துள்ளார். இதனால் மிகுந்த வேதனை அடைந்த சிறுவன் சிறுமி லில்லியிடம் பலமுறை பேச முயற்சித்தும் அவர் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த ஜோவனி லில்லியின் வீட்டிற்கு சென்று தன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரம்ரியாக அவரை சுட்டு கொலை செய்துள்ளார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த லில்லியின் 13 வயதான லில்லியின் தம்பி அங்கு வந்து பார்த்தபோது தனது அக்கா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். ஜோவனி லில்லியின்  தம்பி கையில் வைத்திருந்த போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு ஜோவனியை கைது செய்தனர்