எக்ஸ் வலைதளத்தில் இப்போது ஒரு வீடியோ பயங்கர வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் ஓடும் ரயிலில் இருந்து துணிச்சலாக தண்டவாளத்தில் குதிக்கிறார். அவர் தெரியாமல் தவறி விழவில்லை, வேண்டுமென்றேதான் குதித்திருக்கிறார் என்பது அந்த வீடியோவைப் பார்க்கும்போது தெளிவாகத் தெரிகிறது. அவர் எதற்காக இப்படி ஒரு ஆபத்தான காரியத்தைச் செய்தார் என்று தெரியவில்லை, ஆனால் அந்தப் பெண்ணின் இந்தச் செயல் பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.

​இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அந்தப் பெண்ணை திட்டித் தீர்த்து வருகிறார்கள். “உயிர் மேல கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டாமா? இப்படிச் செய்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்” என்று சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஒரு பெண்ணின் இவ்வளவு பெரிய ஆபத்தான முடிவு இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.