நேற்று தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர் காங்கிரஸ் நாட்டிற்காக எதுவும் செய்வதில்லை. ஆனால், என்னை அவமதிப்பதை தவிர, காங்கிரஸ் கட்சியிடம் வேறு எந்த திட்டமும் இல்லை.

என்னை பற்றி எவ்வளவு அவதூறாக பேசுகிறார்களோ, அந்த அளவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம். எங்கள் தீர்மானம் வலுவடையும் என்பதை காங்கிரஸ் கட்சியினர் மறந்து விடுகிறார்கள். அவர்கள் எவ்வளவு சேற்றை வீசுகிறார்களோ, அவ்வளவு பெருமையாக 370 இடங்களில் தாமரை மலரும் என கூறியுள்ளார்.