கணவர் உயிரிழந்ததால் தனியாக இருந்து பார்த்துக் கொள்ள முடியாத தனது 14 வயது மகளை தாய் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த வீட்டின் அருகே வசிக்கும் 80 வயது முதியவர் யாருமில்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வர இதனை விசாரித்த நீதிமன்றம் முதியவருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.